அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 13 மாதமான தனது குழந்தை மீது தாய் தெரியாமல் காரை ஏற்றிய நிலையில் குழந்தை உயிர்ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழன்(6) அன்று ஜாஃப்ரியா தோன்பர்க் என்பவர், தனது வீட்டில் தனது காரை சரிபார்த்துக் கொண்டிருந்தார். தோன்பர்க் இல்லத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடம் மிக குறுகலாக காணப்பட்டுள்ளது.
காரை அவர் பார்க்கிங் செய்தபோது, எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்த பின்னோக்கி சென்றுள்ளது. இதன்போது அவரது 13 மாத குழந்தை சைரா ரோஸ் மீது ஏறியதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
இதையடுத்து, 13 மாத குழந்தையான சைரா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தாயார் காவல்துறையை தொடர்பு கொண்டு விவரித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தெரியாமல் காரை ஏற்றி குழந்தையின் உயிரை பறித்த நிலையில் தாயார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் உள்ளது.
அதேவேளை 2022 மே 16 ஆம் திகதி பிறந்த இந்த குழந்தை கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.