என்னை விட பெரிய நடிகனா நீ? படப்பிடிப்பில் சக நடிகரை தாக்கிய வடிவேலு

0
262

தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானாக இருப்பவர் வடிவேலு. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் மேடை ஏறியதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைகே அகலபாதாளத்திற்கு சென்றது.

தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். தன்னுடன் நடிக்கும் நடிகர்களை வடிவேலு வளர விட மாட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது அண்மைகாலமாக வைக்கப்படுகிறது.

அந்த வகையில் கம்பீரம் படத்தின் படப்பிடிப்பில் சக நடிகரை வடிவேலு அடித்த சம்பவம் தற்போது தெரியவந்திருக்கிறது. இந்த தகவலை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு வெளியிட்டுள்ளார்.

அப்படத்தில் சாராயம் விற்கும் பெண்ணை பிடிக்கப்போகும் காட்சி படமாக்கப்பட்ட பிறகு மானிட்டரில் தான் நடித்ததை பார்த்திருக்கிறார் வடிவேலு.

அப்போது அவருடன் நடித்த சக நடிகர்களில் ஒருவர் வடிவேலுவை தாண்டி ரியாக்‌ஷன் கொடுத்திருக்கிறார். உடனே அவரிடம் சென்ற வடிவேலு நீ என்ன என்னை விட பெரிய நடிகனா? என கூறி தாக்கினாராம்.

அதுமட்டுமின்றி அதே காட்சியை மீண்டும் எடுக்க சொல்லி, தான் அடித்த நடிகரை கடைசி வரிசையில் நிற்க வைத்ததாக கூறியுள்ளார்.