திடீர் சுகவீனமடைந்த 40 மாணவர்கள்; வைத்தியசாலையில் அனுமதி

0
241

மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40 இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளனர்.

மாணவர்கள் இன்று(28.06.2023) காலை உட்கொண்ட உணவு விஷமடைந்தமையினால் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வைத்தியசாலையில் அனுமதி

குறித்த மாணவர்கள் தற்போது மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.