அமெரிக்கா சென்ற தமிழர்களின் உயர்மட்ட குழு! தொடரும் இழுபறி

0
257

இலங்கை அரசியலை பொறுத்தமட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது என இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘‘இலங்கை தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்ற விடயம் வரும் போது அமெரிக்காவின் செயற்பாடானது இந்தியாவை சார்ந்ததாகவே அமைந்திருக்கும்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் பனிப்போர் நிகழ்ந்தாலும் இலங்கையின் அரசியலில் அவர்கள் கூட்டாகவே செயற்படுவார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே தான் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள்.” என தெரிவித்தார்.