முத்து சிவலிங்கத்துக்கு நாடாளுமன்றில் அனுதாபப் பிரேரணை

0
195

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற முத்துசிவலிங்கம் தொடர்பில் நாடாளுமன்றில் அனுதாபப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை குறித்த அனுதாபப் பிரேரணை மீதான உரை இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற விவாதம்

அன்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரெஜினோல்ட் குரே, புத்திக குருகுலரத்ன, லெரின் பெரேரா ஆகியோரின் மறைவு குறித்தும் அனுதாபப் பிரேரணைகள் நிறைவேற்றப்படவுள்ளன.

அத்துடன் இந்த வார நாடாளுமன்ற அமர்வில் ஊழல் எதிர்ப்பு மசோதா குற்றச் செயல் ஒன்றின் போது சாட்சிக்காரர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் திருத்திய நகல் மசோதா, சிவில் வழக்கு சட்டமூல மசோதா என்பன குறித்த விவாதங்களும் நடைபெறவுள்ளது.