போருக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

0
164

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை அவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தடுப்பு காவல் உத்தரவு

pta act

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் 2 ஆயிரத்து 793 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2, 474 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வலுக்கும் கோரிக்கைகள்

போரின் பின்னர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோர் கைது..! | Number Of Arrestees Last 13 Years Pta Act

10 வழக்குகள் மீளப் பெறப்பட்டுள்ளன என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பயங்கரவாத தடை சட்டம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றது என்றும், அதனை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.