தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் (Elliot Colburn) கண்டித்துள்ளார்.
தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை நான் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளிற்கு பாதுகாப்பு இல்லை
பாரிய அட்டுழியங்கள் இனப்படுகொலைகளிற்கான நீதி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குரல் கொடுக்கும் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவம் அச்சம் தரும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் எலியட் கொல்பேர்ன் (Elliot Colburn) குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளதை தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மெக்டொனாக்கும் கண்டித்துள்ளார்.