கஜேந்திரகுமார் கைது செய்ததில் மகிழ்ச்சி; உதய கம்பன்பில!

0
143

நாட்டில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வந்த கஜேந்திரகுமார் பென்னம்பலத்தை கைது செய்ததில் மகிழ்ச்சி அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகளின் சேவையை பாதிக்கும் வகையில் செயற்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டார் என்ற சந்தோஷமான செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதாவது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் இருப்பது நீதிமன்றத்திற்கு மேல் என்று. ஆனால் அது அவ்வாறு இல்லை என இந்த கைது சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது.

கஜேந்திரகுமாரை கைது செய்ததில் மகிழ்ச்சி; உதய கம்பன்பில! | Happy To Arrest Gajendrakumar Udaya Company

விசேடமாக கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளிற்கு இடையூறு செய்வது முதல் முறை அல்ல அதாவது மாணவர்களின் பரீட்சை விடயத்திலும் அவ்வாறு இடையூறு செய்ய முடியாது என தற்போது கஜேந்திரகுமாருக்கு புரிந்திருக்கும்.

பொலிஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை மாகாண சபைக்கு வழங்குவதற்கு முன்னிலையில் நிற்பவர் இந்த கஜேந்திரகுமார் தான். நினைத்து பாருங்கள் மாகாண சபையிற்கு அதிகாரத்தை வழங்கினால் என்ன நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் காலை கைது செய்யப்பட்டிருந்த கஜேந்திரகுமார் நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.