பாபா வாங்காவின் மற்றொரு அதிர்ச்சி கணிப்பு!

0
211

உலகில் மிகவும் முக்கிய நபராக கருத்தப்பட்டவர்களில் ஒருவரான பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் காலமானார்.

பாபா வாங்கா உயிரிழப்பதற்கு முன் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை கணித்துள்ளார்.

இவரது கணிப்புகளில் 85% சரியானவையாக இருக்கு என்று கூறப்படுகிறது. இவரது கணிப்புகள் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இவரது பெரும்பாலான கணிப்புகள் நிகழ்ந்துள்ளதே இந்த அதிர்ச்சிக்கு காரணம். உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி மற்றும் சோவியத் யூனியன் கலைப்பு ஆகிய இவரது கணிப்புகளும் உண்மையாகின என குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் 2023 ஆம் ஆண்டில்  அணு ஆயுத அச்சுறுத்தல் நடக்கப்போவதை பாபா வாங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் அணு ஆயுதப் பேரழிவு இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படலாம் எனும் பாபா வாங்காவின் கணிப்பு தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் மற்றுமொரு கணிப்பு! | Another Shocking Prediction By Baba Vanga Nuclear

ரஷ்ய – உக்ரைன் போர் ஒராண்டை கடந்த நிலையிலும் தீவிரமடைந்து வருகின்றது, இரு நாடுகளும் அணு ஆயுத பாவனை தொடர்பில் செய்திகளை வெளியிட்டு வரும் வகையில் பாபா வாங்காவின் இந்த அதிர்ச்சிகர கணிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

மேலும், 2023இல் அணுமின் நிலையம் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் ஒரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும், “அணு ஆயுத அச்சுறுத்தல்” விடுப்பதாக உக்ரைன் ரஷ்யாவை குற்றம் சாட்டி வரும் நிலையில், இவரது கணிப்பு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மக்கள் மீது உயிரியல் ரீதியான போரை உலகின் மிகப்பெரிய நாடு மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வாங்கா கணிப்பு எச்சரிக்கிறது.

இதனால் 2023ஆம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பாபா வாங்காவின் அதிர்ச்சி தரும் மற்றுமொரு கணிப்பு! | Another Shocking Prediction By Baba Vanga Nuclear

அதில், உலகில் உள்ள அணு உலைகள் உருகுவதால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படுமாம். ஒருவேளை பாபா வாங்காவின் கணிப்பு படி பூமியில் சிறிய மாற்றம் நடந்தால்கூட அது கால நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அதேபோன்று சூரியனை விட்டு பூமி விலகினால் பனி யுகத்திலும் அடர்ந்த இருளிலும் மூழ்கக் கூடிய கதி நேரலாம்.

அடுத்தபடியாக, இயற்கை முறையிலான குழந்தை பெற்றெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் ஆய்வகங்களில் பெற்றோர்கள் தங்களுக்கான குழந்தைகள் எந்த நிறத்தில் உருவ அமைப்பில் இருக்க வேண்டும் என தெரிவு செய்துக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.

வாங்கெலியா குஸ்டெரோவ் -ஆகப் பிறந்த இந்த பாபா வாங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவராவார். பாபா வாங்கா என்ற இந்தப் பெண் தனது 12 வயதில் பார்வையை இழந்திருக்கிறார்.

அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததாகவும், இவர் கணித்தால் 85 சதவிகிதம் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.

1996ஆம் ஆண்டே இறந்திருந்தாலும் 5079ஆம் ஆண்டு வரைக்குமான எதிர்காலத்தை பாபா வாங்கா கணித்திருக்கிறாராம். இதன் மூலம் உலகம் 5079ஆம் ஆண்டு வரை இயங்கும் என்பது அறிய முடிகிறது.