அனுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு ஆர்ப்பாட்டம் தடை உத்தரவு

0
146

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று (08) நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு வெலிக்கடை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (7) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது எனவே ஸ்ரீஜயவர்தனபுர வீதி, கொட்டா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.