நடராஜ சிலையுடன் இராணுவ வீரர் கைது (Video)

0
183

வவுனியாவில் பிள்ளையார் கோவில் ஒன்றில் சுமார் 55,000 ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலையை திருடிய குற்றச்சாட்டில்  இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (14.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ வீரர் என  தெரிவிக்கப்படுகின்றது.

நடராஜ சிலை திருட்டு

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலையை திருடி விற்பனைக்காக பையில் கொண்டு செல்லும்போது வான் சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

video source from lankasri

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.