நான்கு துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலாளர் ஈ.எம். எஸ். பி. ஏக்கநாயகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி – நான்கு துறைகள்
அதன்படி மின்சார வழங்கல், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் – விநியோகம், தபால் சேவை, சுகாதார சேவை என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்ப்பட்டுள்ளது.