தமிழர் பகுதி புகையிரத நிலையத்திற்கு குண்டர்கள் தாக்குதல்!(Photos)

0
254

கிளிநொச்சி- பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

விசேட பொலிஸ் விசாரணை ஆரம்பம்

இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் புகையிரத நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழர் பகுதி புகையிரத நிலையத்திற்குள் குண்டர்கள் தாக்குதல்!(Photos) | Thugs Attack Tamil Area Railway Station
தமிழர் பகுதி புகையிரத நிலையத்திற்குள் குண்டர்கள் தாக்குதல்!(Photos) | Thugs Attack Tamil Area Railway Station
தமிழர் பகுதி புகையிரத நிலையத்திற்குள் குண்டர்கள் தாக்குதல்!(Photos) | Thugs Attack Tamil Area Railway Station
தமிழர் பகுதி புகையிரத நிலையத்திற்குள் குண்டர்கள் தாக்குதல்!(Photos) | Thugs Attack Tamil Area Railway Station