தமிழர் பகுதியில் மர்ம பொருளுடன் இரவு விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய பெண்கள்!

0
45

கிளிநொச்சியில் உள்ள கந்தசுவாமி ஆலயம் அருகில் பாரியளவிலான தங்கத்துடன் இரண்டு பெண்கள் உட்பட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்றிரவு 11 மணியளவில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு விசேட அதிரடிப்படையினர் கார் ஒன்றை சோதனையிட்ட போது காரில் மறைக்கப்பட்ட நிலையில் 4 கிலோ தங்க கட்டியை மீட்டுள்ளனர்.

பல கோடி பெறுமதியான குறித்த தங்கத்தை வவுனியா நோக்கி கடத்த முற்பட்ட போதே அது மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட காரும், அதன் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.