இலங்கையில் ஈஸ்டர் வாரத்தில் தேவாலயங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (07) ஆரம்பமாகவுள்ள ஈஸ்டர் வாரத்திற்காக இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2019 ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் பல்ர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.