இலங்கைக்குள் நுழைந்த ஈராக் நாட்டு தந்தையையும் மகனையும் நாடு கடத்த நடவடிக்கை!

0
322

ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் இலங்கைக்குள் நுழைந்த தந்தையையும் மகனையும் நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலியான டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈராக் இளைஞர் ஒருவரையும் அவரது தந்தையையும் நாடு கடத்தப்படவுள்ளனர்.

 போலி கடவுச்சீட்டு 

18 வயதான ஈராக் இளைஞர் தனது தந்தையுடன் துபாயிலிருந்து இன்று (07) அதிகாலை 01.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்குள் பிரவேசிப்பதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள குடிவரவுத் திணைக்கள கரும பீடத்தில் டொமினிகன் குடியரசு கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களை வழங்கியுள்ளார்.

இதன்போதே அவர்கள் வழங்கிய கடவுச்சீட்டு போலியானது என தெரிய வந்ததால் அவர்கள் இருவரையும் நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டது.