விடுதலைப்புலிகள் தலைவர் பற்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பழ.நெடுமாறன்!

0
259

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் பழ நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பழ.நெடுமாறன்! | I Will Give New Hope Sri Lankan Tamils Planter

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளது.

எனினும் முன்னதாக இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.