சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்; காதலை கூறி வன்புணர்வு!

0
231

14 வயதுச் சிறுமிகளை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி மற்றும் மன்னாரைச் சேர்ந்த சிறுமிகளை இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சியைச் சேர்ந்த 14 வயதுப் பெண்ணை, உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான 16 வயது இளைஞன் காதலித்துள்ளார்.

சிறுமியை வீட்டைவிட்டு வெளியே வருமாறு கூறியதைத் தொடர்ந்து சிறுமியும் வீட்டில் உள்ள எவருக்கும் தெரியாமல் 5 பவுண் நகையுடன் காதலனுடன் கொழும்புக்குச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை காதலன் எனச் சொல்லப்படும் இளைஞனும் அவரது 3 நண்பர்களும் வன்புணர்ந்த பின்னர் சிறுமியை மீண்டும் கிளிநொச்சிக்குக் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

மன்னார்

இதேவேளை, மன்னாரில் 14 வயதுச் சிறுமியை காதலித்த இளைஞன் கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரும் அவரது நண்பருமாக இணைந்து அந்தச் சிறுமியை வன்புணர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.