நாடாளுமன்றத்தில் அமளி; ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சி!

0
536

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன இந்த உரையை புறக்கணித்ததோடு சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வரவில்லை.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நான்காவது அமர்வின் சம்பிரதாய திறப்பு விழாவை சம்பிரதாயமான வைபவமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் துப்பாக்கி வணக்கங்கள் மற்றும் வாகனப் பேரணிகள் நடைபெறவில்லை.