பிக்பாஸ் வீட்டில் திடீரென கதறி அழுத ஜிபி முத்து! பரபரப்பான உரையாடல்!

0
401

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் தொடர்பில் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது.

திடீரென பிக்பாஸ் வீட்டில் அழுது புலம்பிய ஐ.பி முத்து! பிக்பாஸ்வுடன் பரபரப்பு உரையாடல் | Ip Muthu Cried Wanted To Leave The Bigg Boss House

இதனிடையே, தொடர்ந்து கலகலப்பாக இருந்து வந்த ஜிபி முத்து திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு போக வேண்டும் என அழுது புலம்பி கொண்டிருப்பது தொடர்பான விஷயம், போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஜிபி முத்து கமலிடம் புலம்பியது, மழையில் ஆட்டம் போட்டது, அனைத்து அணிகளுக்கும் உதவி செய்தது, முதல் வார இறுதியில் தனக்கு வந்த கடிதம் தொடபில் ஜிபி முத்து சொன்ன வேடிக்கையான பதில் என அவரை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பிக்பாஸ் வீட்டில் அவரை முதன்மை போட்டியாளராகவும் நிறுத்தி வருகிறது.

திடீரென பிக்பாஸ் வீட்டில் அழுது புலம்பிய ஐ.பி முத்து! பிக்பாஸ்வுடன் பரபரப்பு உரையாடல் | Ip Muthu Cried Wanted To Leave The Bigg Boss House

அப்படி ஒரு சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஜிபி முத்து மிகவும் மனம் பாதிக்கப்பட்டதாக கமரா முன்னாள் பேசுகிறார், அதில், “மனசு மிகவும் அழுத்தமாக இருக்கிறது என்றும் என்னால் சாப்பிட முடியவில்லை, எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அழுது புலம்புகிறார்.   

மேலும், என் தம்பி ஆனந்திடம் நான் பேச வேண்டும் என்றும் ஏதாவது வழி பண்ணுங்கள். என் மனசு மிகவும் பாதிக்கிறது என்றும் ஜிபி முத்து குறிப்பிடுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது போல ஜிபி முத்து பேசியது, பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து உள்ளே இருந்த போட்டியாளர்களும் அவரை மேல மெல்ல தேற்றி கொண்டு வந்தனர்.  

திடீரென பிக்பாஸ் வீட்டில் அழுது புலம்பிய ஐ.பி முத்து! பிக்பாஸ்வுடன் பரபரப்பு உரையாடல் | Ip Muthu Cried Wanted To Leave The Bigg Boss House

இதன் பின்னர், ஜிபி முத்துவை Confession Room-க்கு பிக் பாஸ் அழைத்திருந்தார். அப்போது அவரிடம் பேசிய பிக்பாஸ், “வீட்டில் இருந்து செய்தி கேட்டிட்டு தான் கூப்பிட்டேன். விஷ்ணு நல்லா இருக்கறதா தெரியப்படுத்தி இருக்காங்க. விஷ்ணு உட்பட வீட்ல இருக்குற எல்லாருமே அப்பாவ எப்படியாச்சும் 100 நாள் வீட்டுல வச்சுக்கங்கன்னு சொல்லி இருக்காங்க” என்கிறார்.

இதற்கு பதில் சொல்லும் ஜிபி முத்து, “ஆனா எனக்கு இருக்க முடியல. ஒரு மாதிரி மூச்சு முட்டுது எனக்கு” என்றார். பின்னர் பேசும் பிக்பாஸ், “இத்தனை நாட்கள் நீங்கள் நன்றாக விளையாடி கொண்டிருக்கிறீர்கள்.

முதல் தலைவர் என்ற பதவியையும் 2 மணி நேரம் கஷ்டப்பட்டு ஜெயிச்சு வாங்கி இருக்கீங்க. இந்த முத்து தான் எனக்கு தெரிஞ்ச முத்து. வெளிய இருக்குறவங்க உங்கள பாத்து பல விஷயங்களை கத்துக்குறாங்க.

திடீரென பிக்பாஸ் வீட்டில் அழுது புலம்பிய ஐ.பி முத்து! பிக்பாஸ்வுடன் பரபரப்பு உரையாடல் | Ip Muthu Cried Wanted To Leave The Bigg Boss House

இந்த நிகழ்ச்சில காலடி எடுத்து வெச்சு இன்னும் ஒரு படி மேலே போய் உலகம் பூரா இருக்குற தமிழ் மக்களுக்கு ஜிபி முத்துன்னா யாரு அப்டின்னு தெரியபடுத்தி இருக்கீங்க. இது ஒரு புது அனுபவமா யோசிச்சு அதுக்கப்பறம் செயல்படுங்க” என ஜிபி முத்துவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.

குடும்பத்தினரை பிரிந்து வாடி வரும் ஜிபி முத்து அடுத்து என்ன முடிவெடுப்பார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.