3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு!

0
308

இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தற்போது வரையில், இரண்டு இலட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும்.

2014ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 703 பேர் வெளிநாடுகளில் வேலைவாய்பை பெற்றுள்ளனர்.

அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு முதல், தொழில்வாய்ப்புகளுக்கு வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.