யாழில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 15 வயது மாணவன்! நீதிமன்ற விடுத்த உத்தரவு!

0
459

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று (03.10.2022) உத்தரவிட்டுள்ளது.

யாழில் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த 15 வயது மாணவன்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | 15 Year Old Student Illegal Liquor Yali

இந்த மாணவன் 3 லீட்டர் கசிப்பு மற்றும் 16 லீட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.