நுவரெலியா வீடு ஒன்றில் கஞ்சாச் செடிகள்

0
905

நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சாச் செடிகள் வளர்ப்பில் ஈடுபட்ட 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள தனி வீடு ஒன்றில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது.

வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினருக்கு  காத்திருந்த பேரதிர்ச்சி! | Task Forces Besieged A House

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட செடிகள்

அத்துடன் இதன்போது சந்தேக நபரால் வளர்க்கப்பட்ட 70 தொடக்கம் 77 கஞ்சாச் செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினருக்கு  காத்திருந்த பேரதிர்ச்சி! | Task Forces Besieged A House

குறித்த கஞ்சா செடிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை எனவும் , வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்.

வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினருக்கு  காத்திருந்த பேரதிர்ச்சி! | Task Forces Besieged A House

இதனை தொடர்ந்து நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா ? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றை முற்றுகையிட்ட அதிரடிப்படையினருக்கு  காத்திருந்த பேரதிர்ச்சி! | Task Forces Besieged A House