இனப்படுகொலை தொடங்கி 39 ஆண்டுகள்; சபையில் செல்வம் எம்பி ஆவேசம்!

0
406

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் சிறையில் சிக்குண்ட எமது தமிழர்களை எங்கு கொண்டு புதைத்தீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதேபோல அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இவை இரண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போது சிறையில் சிக்குண்ட எமது தமிழர்களை எங்கு கொண்டு புதைத்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.