வடமாகாண ஆளுநராக தமிழர் பெயர் பரிந்துரை!

0
631

வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் டீ. எம் சுவாமிநாதனை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தான் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ. சமீயூ முகம்மது பஸ்மி தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

இதன் அடிப்படையில் வட மாகாண மக்களுக்கு நன்கு பரிச்சயமான முன்னாள் அமைச்சர் டீ.எம். சுவாமிநாதனை அம்மாகாணத்துக்கு ஆளுநராக நியமனம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டு தொடக்கம் மேல் மாகாண ஆளுநராகவும் பல ஆணைக்குழுக்களின் உறுப்பினராகவும் டி.எம் சுவாமிநாதன் சேவையாற்றியுள்ளார்.

அந்தவகையில் டீ.எம். சுவாமிநாதனை வட மாகாண ஆளுநராக நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏ. சமீயூ முகம்மது பஸ்மி மேலும் தெரிவித்தார்.