துப்பாக்கி பிரயோகம்
கொழும்பு கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகைக்குள் போராட்டகாரர்கள் நேற்று நுழைய முயற்சித்த போது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் எவரும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவர் மாளிகை முற்றுகை
கொழும்பில் நேற்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டதுடன் போராட்டகார்கள் அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
இடம் பெற்ற பாரிய மக்கள் புரட்சியின் காரணமாக கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்க பதவி விலக இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.