யாழில் உள்ள வீடொன்றில் ஒரு இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் (25-04-2022) யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மூளாய் – வேரம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழா நடைபெற்ற நிலையில், வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்று தரிசித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை வீட்டில் இருந்த நகை திருடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்