யாழ். கொடிகாமத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

0
516

யாழ்.கொடிகாமம் – போக்கட்டி பகுதியில் கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணின் ஒன்றரை பவுண் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

கணவனுடன் பயணித்த பெண்ணை இரவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின் தொடர்ந்து சென்றவர்கள் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம் காணப்பட்ட போதிலும், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.