21 ஆயிரத்திற்கு அதிகமான ரஷ்ய துருப்புக்களை கொன்றுவிட்டோம்! உக்ரைன்

0
474

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டுள்ளதாக தெரிவதாக என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.  

உக்ரைன் மீது ரஷ்யா 58 வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 

மேலும், 2,162 ராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய ராணுவத்தின் 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் சேதமடைந்துள்ளன எனவும் உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.