ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ஹாஃபிஸ் நஸீர் அஹமட்

0
344

இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சியின் உயர்பீடம் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

கட்சியின் உயர்பீடம் உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என ரவூப் ஹக்கீம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர் கூறுகையில், முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 4 உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டமையானது மிகவும் மோசமான செயல் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.