மன்னார் மற்றும் முல்லைத்தீவு இளைஞர்கள் தமிழகத்தில் கைது!

0
587

மன்னார் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த இரு இளைஞர்களும் தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.