வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0
574

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் (14) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வன்முறைச் சம்வமானது வவுனியா தேக்கவத்தை பகுதியில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.