அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை பாராட்டிய சஜித்!

0
34

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

பயனாளர் தெரிவு முறைகளில் சில சிக்கல்கள் இருந்தாலும், இது பாராட்டத்தக்க செயலாகும்.

இத்திட்டத்தின் கீழ், சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஹாலிஎல பகுதியில் இவ்வாறான அரிசி விநியோகம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து, விநியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை உயர் மட்டத்தில் பேணுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.