யாழில் வன்முறை கும்பலின் தாக்குதல்!

0
375

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (28) இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த 30 வயது மற்றும் 26 வயதான ஒருவர் மீதும் இரும்பு கம்பிகளால் தாக்கி வாளினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த தாக்குதலின் பின்னர் கோப்பாய் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், வீட்டினை சுற்றி முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, வீட்டினுள் இருந்து 03 வாள்களை மீட்டுள்ளனர்.

குறித்த வாள்கள், வீட்டில் இருந்தவர்களுடையதா? அல்லது தாக்குதலாளிகள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவற்றை கைவிட்டு சென்றுள்ளனரா? என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.