உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக துருக்கியில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

0
238

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்குமிடையே துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனின் கீவ் நகர் அருகேயும், ஜெர்னிகிவ் நகரிலும் படைகளை குறைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள வகையில் இருந்ததாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்த ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.