இலங்கை, யாழில் தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைகூரல்!

0
394

தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபி வயாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னையில் வைத்து கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் தமிழினப் படுகொலையை நிறுத்த வலியுறுத்தியும், இனப் படுகொலைக்கு வல்லாதிக்க இந்திய அரசு துணைபுரிவதைக் கண்டித்தும் தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிர் நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.