வவுனியா, ஓமந்தை பகுதியில் சற்றுமுன்னர் (ஞாயிற்றுக்கிழமை) காருடன் ரயில் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். Four injured collision Kareem Omanthai area
ஓமந்தை, பன்றிகெய்தகுளம் குளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையூடாக கார் புகையிரதக் கடவையை கடந்த போதே இவ்விபத்து ஏற்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரமே இவ்வாறு காருடன் மோதியுள்ளது.
குறித்த 6 பேரும் புங்குடுதீவிலிருந்து ஓமந்தையிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- Four injured collision Kareem Omanthai area
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் வாயு கசிவு; ஐவர் வைத்தியசாலையில்
- கொள்ளுப்பிட்டியில் மசாஜ் தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் கைது
- ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகள்
- ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தாக்கல்
- யாழ். பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்