மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் (சோலர் பேனல்) மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதன் ஊடாக பாடசாலைகளில் உள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். Free electricity through solar cells government schools
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இத்திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்: ‘யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அரச பாடசாலைகள் பின்தங்கிய நிலையிலேயே இயங்கி வருகின்றன. சில பாடசாலைகளுக்கு மின்சார வசதி கூட இல்லை. இன்னும் சில பாடசாலைகளுக்கு மின்சாரம் இருந்தாலும் அதற்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துமளவுக்குப் பெருமளவு வசதிகள் இல்லை.
எனவே, இந்த விடயம் சம்பந்தமாக சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் சூரிய மின்கலன்களை (சோலர் பேனல்) பொருத்தி பாடசாலைகளுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்குவதுடன், சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை விற்பனை செய்வார்கள். அதில் வரும் இலாபத்தில் பாடசாலைக்கும் மாதாந்தம் ஒரு தொகை வழங்குவார்கள்.
நாங்கள் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளோம். – என்றார்.
tags :- Free electricity through solar cells government schools
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இந்து ஆலயங்களில் இனி மிருக பலி பூஜை நடத்த தடை!
- ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் மகிந்தவின் கருத்து!
- ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்!
- எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
- தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ
- அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!
- வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
- பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!