(tamil news namal said mahinda only fire under world gangs)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மட்டுமே பாதாள உலகக் குழுவின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பாதாள உலகக்குழுக்களை இல்லாதொழிக்கும் வல்லமை மஹிந்தவிற்கே உள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள், பாதாள உலகக் குழுக்களை பாதுகாத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குற்றம்சுமத்துகிறார்.
இது அரசாங்கத்தை பற்றிய பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகின்றது.
வடக்கில் போதைப்பொருள் கடத்தல்களுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
விஜயகலா தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்திருந்த போதிலும், அண்மையில் வடக்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் ரணிலுடன் பங்கேற்றிருந்தார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
(tamil news namal said mahinda only fire under world gangs)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்