மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணமடைந்த இலங்கை அகதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரியவந்துள்ளது. (mysterious death former combatants)
மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் சில தினங்களுக்கு முன் மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும் அதுவே இவரது மரணத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு சென்று தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000-க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஜீட் மயூரன் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக செயற்பட்டுள்ளதாக அறிய முடிவதோடு, இவரின் மரணம் தொடர்பில் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளது.
tags :- mysterious death former combatants
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- காவி உடையை கழற்றுவது பௌத்த கௌரவத்திற்கே பாதிப்பு – ஜயந்த சமரவீர
- 24 நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு முக்கிய பதவி
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த அதிர்ச்சி தகவல்
- நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- ஆசிரியர்களின் அநாகரிக செயல்; மாணவன் வைத்தியசாலையில்
- தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு
- இராணுவ வாகனம் மோதியதில் தகப்பனும் மகளும் படுகாயம்!
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை