(tamilnews DMC danger leveled area due increase Atanakalai river)
அத்தனகலு ஓய பெருக்கெடுத்துள்ளதால் அந்த பிரதேசத்தில் வௌ்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, மா ஓயவின் நீர் மட்டம் வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளது.
இதனால், படல்கம மற்றும் கிரிவுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் அவசர கதவொன்று இன்று (25) முதல் திறக்கப்பட்டுள்ளது.
அந்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று மாலை வரை திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அந்த இரண்டு வான் கதவுகளும் மூடப்பட்டன.
அந்த நீர்த்தேக்கத்தால் நீர் பெறும் பிரதேசங்களில் தொடர்ந்து மழை பெய்தால் ஏனைய வான் கதவுகளையும் திறக்க வேண்டி ஏற்படும் என்று அதன் மின்சார உற்பத்தி பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
(tamilnews DMC danger leveled area due increase Atanakalai river)
More Tamil News
- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி
- கடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை
- வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு