“அண்ணன் இறந்தது இப்படி தான்” ஒத்திகை காட்டிய தம்பியும் பலி! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

0
904
Tamil Nadu Brother Died Electricity Power Schocked

(Tamil Nadu Brother Died Electricity Power Schocked)

தமிழ்நாடு நாகை மாவட்டம் கீழ்வேளூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(வயது 37) என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் , கணேசன் தனது வீட்டில் இருந்த ‘சுவிட்ச் போர்டை’ சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த ராஜூ, போலீசாரிடம் தனது அண்ணன், இந்த சுவிட்ச் போர்டை சரிசெய்தபோதுதான் மின்சாரம் தாக்கி இறந்தார் என போலீசார் முன்பு விளக்கி கூறினார்.

அப்போது அந்த ‘சுவிட்ச் போர்டில்’ எதிர்பாராதவிதமாக அவரது கை பட்டது. இதனால் ராஜூவையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ, சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவர்கள் இருவரும் திருமணமானவர்கள் , இவர்களை ஒரே நாளில் இழந்து தவித்து அவர்கள் ஓலமிட்டு அழுதது அந்த பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.

சாவிலும் ஒன்றாகவே இறந்த சகோதரர்களின் உடல்களுக்கு உறவினர்கள், கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்