ஒட்டு மொத்தமாக காலியாக போகும் சூரிச் லிட்டில் சிறிலங்கா

0
19

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் லிட்டில் சிறிலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப் பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை தோற்றம் பெற்றுள்ளது. இதனால் குத்தகைதாரர்களுக்கு பல பாதமான விளைவுகள் ஏற்படகூடும்.

பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026இல் வெளியேற வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பல புதிய தொழிநுட்பங்களுடன் குறித்த கட்டிடத்தொகுதி மேம்படுத்தப்படவுள்ளது.

1980களில் குறித்த கட்டிடம் பல விற்பனை நிலையங்களுடன் சேர்ந்து லிட்டில் சிறிலங்கா என்ற விற்பனை மையமாக மாறியது. விரிவாக்கப்பணிகளின் பின்னர் தற்போதய குத்தகைதாரர்கள் மீண்டும் இணைய முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.