மொட்டு கட்சி ஆதரவாளர்களை தண்ணீரில் தள்ளிய பெண் கைது!

0
502

மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் குழு ஒன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்றையதினம் (25-08-2022) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மொட்டுக் கட்சி ஆதரவாளர்களை தண்ணீருக்குள் தள்ளிவிட்ட பெண்ணுக்கு நேர்ந்த நிலை! | Woman Pushed Slpp Supporters Into The Water Prison

இதற்கமைய சந்தேக நபரை எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.