தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஊரான அரியாலையில் ஊரவர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி இடம்பெற்றது. இந்நிலையில் வெற்றி பெற்ற கில்மிஷாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.