வவுனியா மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த கலைப்பிரிவு மாணவி!

0
280

2022 (2023) ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (04-09-2023) மாலை வெளியிடப்பட்டது.

இதன்படி, அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

குறித்த மாணவி கலைப்பிரிவில் விவசாய விஞ்ஞானம், புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் 3A சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் S பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 194 ஆவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் வவுனியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.