எகிப்தின் ரஃபா கிராசிங் திறக்கப்பட்ட நிலையில், ஆயிரம் பாலஸ்தீன சிறார்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன சிறார்கள்
எகிப்தின் ரஃபா கிராசிங் திறக்கப்பட்டதை அடுத்து வெளிநாட்டவர்கள் மற்றும் படுகாயமடைந்துள்ள பொதுமக்கள் காஸா பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஆயிரம் பாலஸ்தீன சிறார்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற் கொண்டு வரப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், உதவி தேவை என நாடுவோருக்கு கட்டாயம் உதவ வேண்டும் என்ற ஐக்கிய அமீரக ஜனாதிபதியின் அவசர உத்தரவுக்கு ஏற்ப பாலஸ்தீன சிறார்கள் 1000 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடுமையான மனிதாபிமான நிலை

செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரான Mirjana Spoljaric என்பவருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சர் Sheikh Abdullah bin Zayed Al Nahyan முன்னெடுத்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னரே, ஆயிரம் பாலஸ்தீன சிறார்களுக்கான சிகிச்சை தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், ஐக்கிய அமீரகம் தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு உதவி வருவதாகவும், குறிப்பாக குழந்தைகள் எதிர்கொள்ளும் கடுமையான மனிதாபிமான நிலைமைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.