விளையாட சென்ற 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..

0
292

உஹன – குமரிகம பிரதேசத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நண்பர்களுடன் புளி பறிக்கச்சென்ற போது நேற்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கித்துல் மரத்தில் இருந்த தேன்கூட்டை பருந்து ஒன்று தாக்கி அதன் ஒரு பகுதியை உடைத்ததாகவும், அதன் ஒரு பகுதி நடந்து சென்ற சிறுவனின் மீது விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.