இலங்கை ரூபாய்க்கு வரவிருக்கும் கடினமான காலங்கள்; அதிர்ச்சி கணிப்பு

0
254

இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றமை மற்றும் கடனை திருப்பி செலுத்துவது போன்ற காரணங்களாலே இம் மாற்றம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 290 ரூபாயாகக் காணப்படும் அமெரிக்க டொலரின் பெறுமதி டிசெம்பர் மாத இறுதிக்குள் 350 ரூபாயாக உயர்ந்து இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும், பிணை முறிச் சந்தையின் வரத்து ஆகியவற்றாலும் இலங்கை நாணயத்தின் ஆதாயம் உலகளவில் வருமானத்தைக் கண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட 2 பில்லியன் டொலர் நிதி வசதி காரணமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதாரம் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் மோசமான நெருக்கடியிலிருந்து மெதுவாக வெளிவருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.