இணையத்தளத்தில் பயணிகளின் ஆசனங்களை முன்பதிவு செய்ததன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை இந்த வருடத்தில் மூன்றரை மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் .ஏ.எச்.பண்டுக தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட எண்பதாயிரம் பயணிகள் இருக்கைகளை இணையம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
sltb.eseat.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று 1315 என்ற குறுகிய எண்ணை டயல் செய்வதன் மூலம் பயணிகள் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார் .
எதிர்காலத்தில் சுமார் இருநூறு பேருந்துகள் இந்த சேவைக்காக சேர்க்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்